பாகிஸ்தானில் 9 நாள் முடக்க நிலை பிரகடனம்!

Date:

பாகிஸ்தானிலும் தற்போது covid-19 தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால் எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்பது நாள் முடக்க நிலை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் இந்த ஒன்பது நாள் முடக்க நிலை அமல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது .

சுற்றுலாத் துறை உட்பட மக்களுடைய அன்றாட போக்குவரத்துக்கள் கூட இதன் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கொவிட் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது பாகிஸ்தானுக்குள்ளும் அது வேகமாகப் பரவக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே ஒரு முன்னேற்பாடு கருதியே இந்த பண்டிகை கால முடக்க நிலையை அமுலுக்கு கொண்டு வருவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது

இதன்மூலம் பண்டிகைக்கால பொருள்கள் கொள்வனவு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...