புற்றுநோய் தேங்காய் எண்ணை – இன்று மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி!

Date:

மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 230 மெட்ரிக்தொன் தேய்காய் எண்ணை இன்று (07) மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

குறித்த எண்ணைத் தொகையை எடுத்துச் செல்வதற்கான கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அபலடொக்ஸின் எனும் விஷ இராசாயனம் உள்ளடங்கிய காரணத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட105 மெட்ரிக்தொன் தேங்காய் எண்ணை இதற்கு முன்னர் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்றைய தினம் 12 கொள்கலன் தேங்காய் எண்ணை மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...