இலங்கை உட்பட சில நாடுகள் மீது மலேஷியா இன்று முதல் பிரயாண தடையை அறிமுகம் செய்துள்ளது. கொரோணா வைரஸ் கடந்த வாரங்களில் வேகமாக பரவத் தொடங்கி உள்ள நாடுகளுக்கே மலேசியா இந்த பிரயாண தடையை அறிமுகம் செய்துள்ளது. மலேஷிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம் இன்று முதல் பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை நேபாளம் ஆகிய நாடுகளின் பிரஜைகள் மலேசியாவுக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவும் கொரோணா பரவல் காரணமாக பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில்
தனது பிரஜைகளையும் நாட்டையும் காப்பாற்றும் நோக்கில் இந்த பிரயாண தடை தவிர்க்கமுடியாமல் அமுல் செய்யப்படுவதாக மலேஷியாவின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் .