மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் மீது இஸ்ரேல் படையினர் இன்று காலையும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Date:

  1. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள முஸ்லிம்களின் மூன்றாவது புனித ஸ்தலமான al-aqsa பள்ளிவாசலில் இன்று காலை வழிபாட்டுக்காக வந்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிபார்த்து சுடும் பிரிவினரும் இந்த தாக்குதலில் பங்கேற்றுள்ளனர். ரப்பர் தோட்டாக்கள் கண்ணீர்புகை குண்டுகள் என்பனவும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாலஸ்தீனத்தில் இன்று ரமழான் மாதத்தின் 28 ஆவது நாள் ஆகும். இன்றைய தினம் காலையில் வழிபாட்டுக்காக குழுமியிருந்த மக்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

அல் அக்ஸா பள்ளிவாசல் பகுதியை சுற்றி யூதர்கள் ஒரு ஊர்வலத்திற்காக காத்திருந்த வேளையிலேயே முஸ்லீம்கள் மீது யூத படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். கிழக்கு ஜெருசலத்தை 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் படையினர் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்த தினத்தை நினைவு கூறும் வகையில் யூதர்கள் ஜெரூஸலம் தினம் கொண்டாடுவது வழக்கமாகும். அந்த தினத்தை அவர்கள் வேண்டுமென்றே முஸ்லிம்களை ஆத்திரமுட்டச் செய்யும் வகையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் ஊடாக ஊர்வலமாகச் சென்று கொண்டாடுவதுண்டு அவ்வாறான ஒரு ஊர்வலத்துக்கு இன்று அவர்கள் தயாராக இருந்த வேளையிலேயே இஸ்ரேல் படையினர் முஸ்லிம்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். சற்றுமுன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் படி தொடர்ந்தும் அந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை காணப்படுவதாகவும் இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் அந்த பிரதேசத்தை சுற்றி வட்டமிட்டட வண்ணம் இருப்பதாகவும் ஊர்வலம் நடக்கும் பட்சத்தில் அது பெரும் கைகலப்பாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

காணொளி 👇

https://www.aljazeera.com/news/2021/5/10/israeli-forces-raid-al-aqsa-compound-live

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...