நைஜீரியத் தலைநகர் அபூஜாவில், சமூக அமைதி’ குறித்த உலக முஸ்லிம் (ராபீதா) லீக்கின் முன்னெடுப்பு தொடர்பாக அந்நாட்டின் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நேற்று சிறப்பு சர்வதேச மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் முஸ்லிம் அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும், முஸ்லிம் உலக லீக் (MWL) அமைப்பின் பொதுச்செயலாளருமான ஷேக் டாக்டர் முகமது அல்-இஸ்ஸா கலந்து கொண்டார்.
மேற்கு ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை (Social Peace in West Africa) பேணுவதற்காக முஸ்லிம் உலக லீக் எடுத்துள்ள முக்கிய முயற்சியின் ஒரு பகுதியாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் முக்கிய தருணங்களின் புகைப்படங்கள்..

