ரயில்வே திணைக்கள ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று!

Date:

ரயில்வே திணைக்களத்தின் 40 ஊழியர்கள் கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உதவிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன நேற்று (17 ) தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் சங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், ரயில்வே தொழிலாளர்களுக்கு உடனடியாக கொவிட் தடுப்பூசி வழங்குமாறு நான்கு முறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால் ஊழியர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளதாகவும், பயணிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ள அவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது சுகாதார அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...