10 நாட்களில் 10,000 கட்டில்களை வழங்கும் வேலைத் திட்டம்!

Date:

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்களை வழங்குவதற்கான ஒரு துரித வேலைத்திட்டம் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொவிட் நோயாளர்களுக்கான இந்த கட்டில்களை தயாரிப்பதற்கு நாட்டின் பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் தொழில் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த இளம் பெண்களும் இந்த கட்டில்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அந்த இடத்தை பார்வையிட்டார். இந்த மாவட்டத்தில் 4 இடங்களில் கட்டில்கள் தயாரிக்கப்படுவதுடன், கொவிட் நோயாளர்களுக்காக 200 கட்டில்களை தயாரித்து வழங்கவுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை ஹார்டி உயர்கல்வி நிறுவனத்தில் நடாத்தி வரும் கொவிட் 19 மகளிர் விடுதியின் செயல்பாடுகளையும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...