10 நாட்களில் 10,000 கட்டில்களை வழங்கும் வேலைத் திட்டம்!

Date:

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்களை வழங்குவதற்கான ஒரு துரித வேலைத்திட்டம் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொவிட் நோயாளர்களுக்கான இந்த கட்டில்களை தயாரிப்பதற்கு நாட்டின் பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் தொழில் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த இளம் பெண்களும் இந்த கட்டில்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அந்த இடத்தை பார்வையிட்டார். இந்த மாவட்டத்தில் 4 இடங்களில் கட்டில்கள் தயாரிக்கப்படுவதுடன், கொவிட் நோயாளர்களுக்காக 200 கட்டில்களை தயாரித்து வழங்கவுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை ஹார்டி உயர்கல்வி நிறுவனத்தில் நடாத்தி வரும் கொவிட் 19 மகளிர் விடுதியின் செயல்பாடுகளையும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...