16 வயது பலஸ்தீன சிறுவன் இஸ்ரேல் படைகளால் மறைந்திருந்து சுட்டுக்கொலை

Date:

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் மேற்குக்கரை பிரதேசத்தில் உள்ள நப்லுஸ் கிராமத்தில் நேற்று இரவு 16வயது இளைஞர் ஒருவரை இஸ்ரேலிய படைகள் மூர்க்கத்தனமாக சுட்டுக் கொன்றுள்ளனர்.

கிராமத்துக்கு அருகில் உள்ள வீதி வழியாக இந்த சிறுவன் சென்றுகொண்டிருந்தபோது அங்கு மரம் ஒன்றின் கீழ் மறைந்திருந்த இஸ்ரேலிய படைவீரர்கள் அந்த சிறுவனின் பின்புறமாக சுட்டுள்ளனர். இரண்டு துப்பாக்கி ரவைகள் அவனுடைய பின்புறத்தை தாக்கிய நிலையில் செயிட் ஒபைத் என்ற அந்த சிறுவன் கீழே விழுந்துள்ளான்.

கொல்லப்பட்ட சிறுவன் செயிட் ஒபைட்
கொல்லப்பட்ட சிறுவன் செயிட் ஒபைட்

இந்த சம்பவம் கேள்வியுற்று அவனை காப்பாற்றுவதற்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்று சென்றபோது அதை குறிப்பிட்ட இடத்துக்கு செல்லவிடாமல் சுமார் 15க்கும் அதிகமான நிமிடங்கள் இஸ்ரேலிய படைகள் தடுத்து வைத்துள்ளனர். அதன் பின்னரே அந்த சிறுவன் அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு நப்லுஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளான்.

பலஸ்தீன சிறுவர்களை அதுவும் நிராயுதபாணியான சிறுவர்களை இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து இந்த பிரதேசங்களில் இவ்வாறு கொலை செய்து வருகின்றமை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சிறுவர்களுக்கான பலஸ்தீன பாதுகாப்பு பிரிவு கவலை தெரிவித்துள்ளது .

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...