ஆசிரியைக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள்!

Date:

ஆசிரியை ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தெனியாய கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் அனைத்து மாணவ மாணவிகளையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த மொரவக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தீர்மானித்துள்ளது.

பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டிருந்த கடந்த 27 ஆம் திகதி குறித்த ஆசிரியை பாடசாலைக்கு வந்திருந்ததாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்திலும் அவருக்கு தொற்று இருந்தமை தெரிய வந்துள்ளது.

பாடசாலையின் தரம் ஐந்து மாணவர்கள் சிலர் ஆசிரியையுடன் நெருங்கிப் பழகியவர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், ஆசிரியை அன்றைய தினம் பாடசாலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலும் கலந்துக் கொண்டு இருந்ததாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

அதன்படி, பாடசாலை மாணவர்கள் அனைவரும் அவதான நிலையில் உள்ளதால், அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...