இந்த ஆண்டு ஹஜ் கடமைகளை செய்ய வெளிநாட்டு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

Date:

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான கடுமையான உடல்நலம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என பிரதான பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாத்ரீகர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்காக இந்த ஆண்டு ஹஜ் அனைத்து சுகாதார, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுடன் மே 9 ஆம் திகதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சின் முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், சவூதி அரேபியாவில் உள்ள சுகாதார நிறுவனங்கள் தொடர்ந்து நிலைமையை மதிப்பிடுவதோடு, அனைத்து மனிதகுலத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சகம் கூறியது.

குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் நிறுவன திட்டங்களை பின்னர் அறிவிப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக 2.5 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவிற்கு பயணிப்பதைக் காணும் ஹஜ் கடந்த ஆண்டு நவீன வரலாற்றில் முதல் முறையாக குறைக்கப்பட்டது, கோவிட் -19 காரணமாக 1,000 யாத்ரீகர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...