இன்று இரவு சில பகுதிகளுக்கு 200 மி.மீ மழை வீழ்ச்சி!

Date:

நேற்று(13) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

காலி மாவட்டத்தில் ஹினிதுமவில் 190 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

 

இதேவேளை, தெற்கு, மேல், சப்ரகமுவ ,வடமத்திய, மத்திய மாகாணங்களில் மழையுடனான கால நிலை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் சில இடங்களில் இரவு வேளையில் 200 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி இடம்பெறக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பலத்த மழை பெய்யும் போது சில பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...