இஸ்ரேல்-காசா 11 நாள் மோதல் முடிவுக்கு வந்துள்ளது

Date:

பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவுக்கும் இடையிலான 11 நாள் மோதலை முடிவுக்குக் கொண்டுவருதற்கான யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் குறைந்தது 230 பாலஸ்தீனியர்களும் 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் அமைச்சரவை உடனடியாகவும் நிபந்தனைகளற்றதுமான மோதல் தவிர்ப்பை அமல்படுத்துவதற்கு நேற்று தீர்மானித்தது.

அதேபோன்று ஹமாசின் அமைச்சரவையும் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு தரப்புக்கும் இடையில் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி முதல் தீவிர மோதல்கள் இடம்பெற்று வந்தன.

காசாவில் மரணித்தவர்களில் அதிகப்படியானவர்கள் சிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...