ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பாரிய சதி – சட்டமா அதிபர்!

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஒரு சிறப்பு பேட்டியின்போது பிரதான ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், நேரம், திகதி மற்றும் பிற விவரங்களைப் பெறுவதற்கான பாரிய சதித்திட்டத்தில் தேசிய புலனாய்வு சேவை (எஸ்.ஐ.எஸ்) ஈடுபட்டுள்ளது என்றார்.

இந்த பாரிய சதியில் ஈடுபட்ட அனைவரையும் ஆதாரங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்தினால் சூத்திரதாரி என்று கூறப்படும் நவ்பர் மௌலவி உட்பட பல சந்தேக நபர்கள் மீது சட்டமா அதிபர் தனது கவனத்தை செலுத்தி வருவதாகவும் கூறினார்.

சதிகாரர்கள் தனி விமானத்தில் இருப்பதாகவும், தற்கொலை குண்டுவெடிப்பு நடத்த முடிவு செய்த “சதிகாரர்களில்” ஒருவரான சஹ்ரான் ஹாஷிம் என்றும் சட்டமா அதிபர் நியூஸ்ஃபர்ஸ்ட் க்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் ஈடுபட்டனர் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை தேசிய புலனாய்வாளர்களால் முன்வைக்கப்படவில்லை என்றும், அவர்கள் தற்போது அடையாளம் காணப்படாத நபர்களாக கருதப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

சில நேரங்களில் வெளிநாட்டினர் ஒருபோதும் அம்பலப்படுத்தப்பட மாட்டார்கள் என்று தப்புல டி லிவேரா கூறியுள்ளார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...