கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு  உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

Date:

திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விளாங்குளம்,முத்து நகர் மற்றும் இடிமண் ஆகிய பிரதேசங்களுக்கான உணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதி தவிசாளர் எம்.நெளபர் தலைமையில் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஸன பாண்டி கோரலவின் பங்கேற்புடன் சுமார் 600 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

இதன் போது இலங்கைக்கான சவூதி தூதுவரகத்தின் சிரேஷ்ட்ட கணக்காளர் கலாநிதி அப்துல் அஸீஸ் கலந்து கொண்டு தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

இதற்கான நிதியுதவியினை பல்கேரியா நாட்டின் இஸ்மாயில் பிஸ்லூ தொண்டு நிறுவனம் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடதக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...