சீன அதிபருடன் பைடன் பேச்சு – மோதலைத் தவிர்க்க அதிரடித் தீர்மானம்!

Date:

ஐரோப்பாவில் நேட்டோ படைகளை வைத்திருப்பதை போல இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா வலுவான இராணுவத்தை நிறுத்தும்.அது மோதலுக்காக அல்ல. மோதலைத் தவிர்ப்பதற்காகவே என்பதை சீன அதிபரிடம் தான் கூறியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அரசாங்கம் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பைடன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

நான் பதவி ஏற்று 100 நாட்களில் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசி போடப்படும் என உறுதி அளித்தேன். ஆனால், தற்போது 100 நாட்களில் 220 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.

அமெரிக்கர்களை பாதுகாப்பதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.அத்தோடு
அமெரிக்க மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...