தீப்பற்றி அழிந்து போன கப்பலினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் மாசை ஆராய்வதற்கு நிபுணர்கள் குழு!

Date:

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீப்பற்றிக் கொண்ட கப்பலினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் மாசை ஆராய்வதற்கு நிபுணர்கள் குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, சமுத்திரவியல் தொடர்பான நிபுணர்களும், பல்கலைக்கழக கலாநிதிகளும் இந்தக் குழுவில் நியமிக்கப்படவிருக்கின்றனர்.

 

கடல்வாழ் உயிரினங்கள் உட்பட கடல் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பிலும் இந்தக் குழு ஆராயும்.

 

இதேவேளை, ஏற்பட்டிருக்கும் சுற்றாடல் மாசைக் கணிப்பிட்டு நஷ்டஈடு பெறுவதற்கான சிபார்சையும் இந்தக் குழு முன்வைக்கும்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...