பொலிஸ் நிலையங்களுக்கு இரண்டு சுற்றறிக்கைகள் அனுப்பி வைப்பு

Date:

இலங்கையில் கொவிட் தொற்றின் மூன்றாவது அனர்த்த நிலையை கவனத்திற் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த முதலாம் திகதி வெளியிட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பொலிஸ் தலைமையகம், நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இரண்டு விசேட சுற்றறிக்கைளை கடந்த 04 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளது.

இதன்படி, புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, வைபவங்களை நடத்துவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தடை உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் தலைமையகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் புதிய சுகாதார வழிகாட்டல்களின் மூலம் பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் வாடகை வாகனங்கள் தொடர்பாகவும் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுகின்றவர்கள் தொடர்பாகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முகக் கவசங்களை முறையாக அணியாதவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...