மலேஷியா அறிமுகம் செய்துள்ள பிரயாண தடை

Date:

இலங்கை உட்பட சில நாடுகள் மீது மலேஷியா இன்று முதல் பிரயாண தடையை அறிமுகம் செய்துள்ளது. கொரோணா வைரஸ் கடந்த வாரங்களில் வேகமாக பரவத் தொடங்கி உள்ள நாடுகளுக்கே மலேசியா இந்த பிரயாண தடையை அறிமுகம் செய்துள்ளது. மலேஷிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம் இன்று முதல் பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை நேபாளம் ஆகிய நாடுகளின் பிரஜைகள் மலேசியாவுக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவும் கொரோணா பரவல் காரணமாக பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில்
தனது பிரஜைகளையும் நாட்டையும் காப்பாற்றும் நோக்கில் இந்த பிரயாண தடை தவிர்க்கமுடியாமல் அமுல் செய்யப்படுவதாக மலேஷியாவின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...