முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடன் முரண்பட்ட பொலிசார்!

Date:

முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வு தொடர்பில் செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் மரணித்த பொது மக்களுக்காக ஆத்மசாந்திப்பிரார்த்தனை நிகழ்வு குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று இடம்பெற்ற போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களிடம் அடையாள அட்டையை பொலிஸார் கேட்டுள்ளனர்.

இதன்போது ஊடக அமைச்சின் அடையாள அட்டையை அவர்கள் வழங்கியபோதும் அது பயனில்லை தேசிய அடையாள அட்டையை தருமாறு கேரியுள்ளனர். எனினும் ஊடகவியலாளர்கள் தேசிய அடையாள அட்டையை கொடுத்தபோது இன்றைய தினம் நீங்கள் வெளியில் செல்ல முடியாது உங்களை கைது செய்ய வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

எனினும் ஊடகவியலாளர்கள் பொலிஸ் ஊடக பேச்சாளர் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்கள் செல்ல முடியும் என தெரிவித்துள்ளாரே என தெரிவித்த போது அவ்வாறு இல்லை நாமே தீர்மானிப்பேன் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஊடகவியலாளர்களை கடும் தொனியில் எச்சரித்த பொலிஸார் சிறிது நேரத்தின் பின்னர் செல்ல அனுமதித்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...