ரயில் பாலம் இடிந்து விழுந்தது 15 பேர் மரணம் | மெக்சிகோ தலைநகரில் பரிதாபம்

Date:

மெக்சிகோவின் தலைநகரில் பிரதான ரயில்வே மேம்பாலம் ஒன்றுக்கு மேலாக ரயில் வண்டி சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்ததால் கீழ வீதியில் இருந்த 15 பேர் மரணம் அடைந்தனர்.

இந்த ரயில் வண்டி பாலத்திற்கு மேலாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்து. கீழே சுறுசுறுப்பான வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் பல இதில் சிக்கி கொண்டன.

இதனால் 15 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பல ரயில் பெட்டிகள் பாலத்திற்கு கீழாக வீதியில் விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்களும் தீயணைப்பு படையினரும் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து
இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...