லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலையின் முன்பாக குழப்பநிலை

Date:

கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு முன்னால் அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்குவதில் நிகழ்ந்த சிக்கல்கள் காரணமாக குழப்பமான நிலை நிலவியுள்ளது . 3000க்கும் அதிகமான மக்கள் அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்கவேண்டும் என கோரி காத்திருந்த வேளையே, பதற்ற நிலை உருவாகியுள்ளது .

மருத்துவமனைக்குள் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது என சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை தொடர்ந்து பெருமளவான மக்கள் இன்று காலை மருத்துவமனைக்கு வெளியே குவியத்தொடங்கினர்.

பலர் அந்த பகுதிக்கு சென்று, தங்களிற்கு தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுக்க தொடங்கினார்கள், இதன் காரணமாக அந்த பகுதியில் சமூகவிலக்கல் முற்றாக புறக்கணிக்கப்படும் நிலையேற்பட்டது.

இரண்டாவது டோஸ் மருந்தினை அரசாங்கம் வழங்கமுடியாத நிலையில் உள்ளதால் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துவரும் நிலையிலேயே இன்று இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...