அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளவர்களுக்கான இணையத்தளம்!

Date:

சீனி, பால்மா, சோளம் நெல் மற்றும் அரிசி போன்றவற்றை களஞ்சியப்படுத்தி வைத்துள்ள இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் www.caa.gov.lk என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார்.

மேலும், தமது கையிருப்புக்களின் விபரங்களை குறித்த இணையத்தளத்தில் புதுப்பித்துக் கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

சீனி, பால்மா, சோளம், நெல் மற்றும் அரிசி போன்றவற்றை வைத்துள்ள நபர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...