அரசின் முடிவை மாற்றியமைத்து எண்ணெய் விலையை குறைக்கவும் -எதிர்க்கட்சித் தலைவர்!

Date:

எரிபொருள் விலையை அதன் வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் துன்புறுத்தும் முறையில் உயர்த்துவதற்கான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது, இந்த முடிவால் ஏற்கனவே நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அத்தகைய தீர்வை எடுத்தவர் யார் என்று தெரியாத அளவிற்கு அரசாங்கமும் நகைச்சுவையாக மாறியுள்ளது. கூட்டாக சம்பந்தப்பட்ட முடிவை எடுத்ததன் பிற்பாடு அவ்வாறு இல்லை எனக் கூறி, பின்னர் ஒரு நபரை இலக்கு வைக்க அரசாங்கத்தின் முக்கிய தரப்பு செயல்படுகிறது.

இறுதியில், அவர்களின் உள்ளக அதிகார போராட்டத்தின் காரணமாக ஹிலட்டினுக்குச் செல்வது அப்பாவி மக்களே, அரசாங்கத்தில் யாரும் இல்லை என்பதைக் கூறுகிறேன் *

அரசாங்கம் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. அரசாங்கத்தின் அதிகாரப் போராட்டம் அரசாங்கத்தாலயே தீர்க்கப்பட வேண்டும், மக்கள் அந்த போராட்டத்திற்கு பலியாகும் வரை காத்திருக்க நாங்கள் தயாராக இல்லை.

எனவே, எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தன்னிச்சையான மற்றும் பொறுப்பற்ற முடிவை உடனடியாக மாற்றியமைக்குமாறு* நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

அதை அவ்வாறு செய்யாமல், வெறும் ஊடக விளம்பரங்களால் மக்கள் பயனடைய மாட்டார்கள் என்பதையும், இரண்டு ஆண்டுகளாக மக்கள் இத்தகைய சிறுபிள்ளைத்தனமான மற்றும் சில்லறை நகைச்சுவைகளை அனுபவித்ததையும் நாங்கள் அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துகிறோம்.
எனவே,
கொரோனாவின் அழுத்தத்தின் கீழ் மக்கள் அவதிப்பட்டு, ஒரு வேளை விட்டு பிரிதொரு வேளை சாப்பிடும் மக்கள் இருக்கும் ஒரு நாட்டில், ஆட்சி அதிகாரம் மற்றும் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றில் அரசாங்கம் எடுத்த தன்னிச்சையான முடிவை எத்தகைய யேசிப்புகளும் இன்றி உடனடியாக மாற்றியமைத்து எண்ணெய் விலையை உடனடியாக குறைக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...