உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சு விடுத்துள்ள செய்தி!

Date:

சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே, இலங்கை இம்முறை உலக சுற்றுச்சூழல் தினத்தை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளையும், வீட்டுத் தோட்டங்களையும், நுளம்புகளற்ற இடமாக வைத்திருக்க இன்றும், நாளையும், நடவடிக்கை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சு பொதுமக்களைக் கோரியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு 48 மணித்தியாலம் என்ற தொனிப்பொருளில், இந்த வேலைத்திட்டம் நடைமுறையாகிறது.

கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் தற்போதைய காலநிலையுடன், எதிர்காலத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிக்கும் நிலைமை உள்ளது.

எனவே இதனை கருத்திற் கொண்டு பொதுமக்கள் தத்தமது சுற்றுச்சூழலை தூய்மையாக பேணுமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...