கம்மன்பிலவின் முடிவினால் அரசுக்குள் பதற்றம்!

Date:

எரிவாயு விலையை தீர்மானிப்பது தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர் பதவியை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இராஜினாமா செய்துள்ளார்.

 

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானமெடுக்கும் குழுவில் பங்கேற்றால் அரசுக்குள் இருக்கும் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகவேண்டிவருமென கருதியே அவர் இந்த உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

அரசின் பொதுத் தீர்மானத்திற்கமைய எரிபொருள் விலைகளை அதிகரித்தாலும் அரசின் உறுப்பினர்களே அதனை விமர்சனம் செய்துள்ளதால் அதிருப்தியடைந்து இந்த முடிவை அமைச்சர் கம்மன்பில எடுத்துள்ளமை ஆளுங்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ச அமைச்சராக நியமனம் பெறவுள்ளாரென செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் கம்மன்பில இந்த இராஜினாமாவை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...