கிராமம் ஒன்றில் கொவிட் கொத்தணி!

Date:

வெலிமட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொரகஸ் ஹுலங்கபொல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் 40 கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர்.

கடந்த தினம் பதிவான தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேரும் மற்றும் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 10 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நோயாளர்கள் அனைவரையும் இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

ஒரே சந்தர்ப்பத்தில் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ள காரணத்தால் பிரதேசத்தின் அனைத்து விற்பனை நிலையங்களையும் மூட பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள கினிகத்ஹேன கடவல தோட்டத்தில் புதிதாக 24 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேபோல், அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று 47 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.

80 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் பதிவானதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...