குருநாகல் – கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோத ஓட்டப்பந்தயம் | இருவர் பலி

Date:

குருநாகல் – கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு சட்டவிரோதமாக உள்நுழைந்து ஓட்டப்பந்தயம் நடத்திய போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு ஏழு மணியளவில் குறித்த இரண்டு வாகனங்களும் இந்த பாதையின் ஊடாக குருநாகல் நோக்கிப் பயணித்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும், விபத்து இடம்பெறும் போது குறித்த காரில் 5 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய மூன்று பேரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த நெடுஞ்சாலை இன்னும் போக்குவரத்துக்குத் திறக்கப்படாத நிலையில், சட்டவிரோதமான முறையில் அவர்கள் இந்தப் பாதை ஊடாக பயணித்துள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...