கொலைக் குற்றவாளி துமிந்தவின் விடுதலை நாட்டின் ஆட்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது -இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதிருப்தி!

Date:

கொலைக்குற்றத்திற்கு உள்ளாகி மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெப்லிட்ஸ் அம்மையார், ட்விட்டரில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டக் கைதிகளின் முன்கூட்டிய விடுதலையை நாங்கள் வரவேற்கிறோம், எனினும் 2018 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உறுதிசெய்த தீர்ப்புக்கெதிராக, இப்போது துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சம அணுகல் என்பது ஐ.நா. நிலைபேறான அபிவிருத்தி கோட்பாடுகளுக்கு அடிப்படையானவையாகும். இவற்றை இலங்கையும் ஏற்றுள்ளது என்றும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...