சிறைச்சாலை கூரை மீது ஏறி போராட்டம் நடத்திய கைதிகளுக்கு விடுதலை இல்லை

Date:

மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலை கூரை மீது ஏறி போராட்டம் நடத்தும்கைதிகளுக்கு இனி எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலைக்கான பரிந்துரையை முன்வைக்கப் போவதில்லை என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கைதிகள் காரணமாக சிறைச்சாலை பாதுகாப்பு கேள்விக்கு உட்பட்டிருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொலைக்குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை அளித்ததை அடுத்து மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் உள்ள மரணதண்டனை கைதிகள் தமக்கும் விடுதலை வேண்டும் அல்லது தமது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென கோரி போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...