நாளை முதல் ரூ. 5,000 வழங்கும் திட்டம்  –  முழு விபரம்!

Date:

நாளை முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு  வழங்கப்படும் என, இன்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார் அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில .

மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்று மற்றும் பயணக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தை இழந்தவர்களும் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என கூறினார்.

சமூர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்த கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தகுதியுடையோர் விபரம் பின்வருமாறு,

  1. நிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்பங்களுக்கும் இது உரித்தாகும்.
  2. சமுர்த்தி பெறும் குடும்பங்கள்.
  3. சமுர்த்திபெற தகுதியிருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காது காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள்.
  4. 70 வயதைக் கடந்த முதியவர்கள்.
  5. 70 வயது பூர்த்தியடைந்தும் இதுவரை மூத்தோர் கொடுப்பனவுக்கான முத்திரையைப் பெறாது காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள்.
  6. மாற்றுத் திறனாளிகள்.
  7. இதுவரை கொடுப்பனவைப் பெறாது காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள்.
  8. PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களும்.
  9. சிறுநீரக பாதிப்பு போன்ற பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுருப்போர்.
  10. ஒருவர் சமுர்த்தி பெறுகின்றவர் அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர், அத்துடன் அவர் மூத்தோர் கொடுப்பனலைப் பெறுகின்றவர், அல்லது அதனை பெற தகுதியுடையவராயின் – அவர் மேற்படி இரண்டு வகைக்குட்பட்ட கொடுப்பனவுகளையும் (5000 + 5000 = 10,000/=) பெறுவதற்கு தகுதி உடையவராவர்.
  11. இந்த உதவி தொகையை பெற தகுதியுடையோர் எவர் என்ற முழுமையான தகவல்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில், கிராம சேவகர்களூடாக மக்கள் பெற முடியும்.

இந்த சேவையை ஒருங்கிணைப்பதற்காக ஜனாதிபதி செயலகம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே, இந்த சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளை பிரதேச செயலக மட்டங்களில் தொடர்பு கொண்டு இந்த கொடுப்பனவை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

Circular – 5000 Allowance – Sinhala

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...