நெருங்கிய குடும்பத்தாரின் இறுதிச் சடங்குகளில் மாத்திரம் கலந்து கொள்ள மாகாண எல்லைகளை கடக்க அனுமதி

Date:

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியசேவைகளில் ஈடுபடுவோரை தவிர, ஏனையோருக்கு மாகாண எல்லைகளை கடக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

என்றாலும் நெருங்கி உறவினர்களின் சடங்குகளில் கலந்துக்கொள்வதற்கு மாத்திரம் மாகாண எல்லையை கடக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும்  அவர் தெரிவித்தார்.

எனினும், சோதனை சாவடிகளில் அதற்குரிய சரியான ஆவணங்களை சமர்ப்பிப்பது அத்தியாவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதைவிடுத்து, பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் மாகாண எல்லையை கடக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...