நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான இயந்திரமொன்றை திருடிய குற்றச்சாட்டில் நகரசபை உறுப்பினர்கள் இருவர் கைது

Date:

மீதொட்டமுல்லவில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையிலிருந்து இயந்திரமொன்றை திருடிய குற்றச்சாட்டில் கொலன்னாவை நகரசபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 50 மற்றும் 52 வயதுடையவர்கள் என்று போலீஸ் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும், வெல்லம்பிட்டி காவல் நிலையத்தில் கடந்த 11 ஆம் திகதி புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று (16) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

Popular

More like this
Related

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 2323ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...