பகிடிவதை சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் கருத்தரங்கு!

Date:

பகிடிவதை சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்துவதற்கு கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாளி வளாகம் தீர்மானித்துள்ளது.

இதன் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை சூம் (ZOOM) தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெறும் என பேராசிரியர் பிரதீபா மகாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களை 077 359 62 28 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்த பேராசிரியர் பல்கலைக்கழகங்களில் இருந்து பகிடிவதையை ஒழிப்பதற்கான கூட்டு வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

பகிடிவதை சட்டமூலத்தை காலத்திற்கு ஏற்றவாறு திருத்த வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச பொறிமுறை முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென பேராசிரியர் பிரதீபா மகாநாம ஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...