பயணத்தடையால் நாடாளுமன்றத்துக்கு பூட்டு!

Date:

நாடாளுமன்ற கட்டட தொகுதியின் அனைத்து அலுவலகங்களும் எதிர்வரும் 7ம் திகதிவரை மூடப்பட்டுள்ளன.

 

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை 7ம் திகதிவரை நீடிப்பதால் அனைத்து அலுவலக ஊழியர்களும் கடமைக்கு சமுகமளிக்கத் தேவையில்லை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மாத்திரம் பாதுகாப்பு கடமையில் இருப்பர்.

நாடாளுமன்றம் 8ம் திகதி கூடவுள்ள போதும் 7ம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விசேட குழு கூட்டத்தில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குசானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான  வானிலை நிலவக்கூடும்.என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய...

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...