மற்றுமொரு தடுப்பூசிக்கு அனுமதி கோரல்!

Date:

பாரத் பயோன்டெக் நிறுவன தயாரிப்பான கோவெக்சின் தடுப்பூசி 77.8 சதவீத செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தனது மூன்றாவது கட்ட பரிசோதனை அறிக்கையை மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

 

எனினும் கோவெக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை.

 

அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரமளிக்க வேண்டும் என பாரத் பயோன்டெக் நிறுவனம் தங்களது 90 சதவீத ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.

 

இந்நிலையில் ஒப்புதலுக்கு முந்தைய இறுதி ஆவணங்களை சமர்ப்பிக்கும் கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.

 

இதனால் விரைவில் கோவெக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...