மாதிவெல பகுதியிலும் டெல்டா வைரஸ் திரிபு!

Date:

கொழும்பு மாதிவெல – பிரகதிபுர பகுதியில், டெல்டா கொவிட் திரிபு தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டதையடுத்து, அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், தெமட்டகொட ஆராமய இடம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கமைய, அதிக வீரியம் கொண்ட டெல்டா கொவிட் திரிபுடன் கூடிய 5 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இலங்கையில் டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதனையடுத்து, அப் பிரதேசத்தை தனிமைப்படுத்தி, குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், சுகாதார அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய, நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வீரியம் மிக்க டெல்டா திரிபு பரவியுள்ளதா எனக் கண்டறிய விசேட பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...