வீடொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளம் தம்பதி

Date:

நேற்று (06) பிற்பகல் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் இளம் தம்பதியின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36 வயது ஆண் மற்றும் ஹெட்டிபொல பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம் யுவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.அவர்கள் இருவரும் வெல்லவாய பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...