அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை அவசியமானது – நியாயப்படுத்தி ஜனாதிபதி ஊடக அறிக்கை

Date:

எரிபொருள் விலைஅதிகரிப்பு அவசியமானது,ஏனைய சமூக பொருளாதார நன்மையளிக்கும் இலக்குகளை அடைவதற்கு இது உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொதுவான தந்திரோபாயத்தின் ஒரு அம்சமே விலை அதிகரிப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் வங்கி முறையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது,குறைந்த வட்டிவீதத்தை பேணுவதை. வெளிநாட்டு நாணயத்தை செலவிடுவதை குறைப்பதை நோக்கமாக கொண்டது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இது மக்களின் சுகாதாரம் நலன்புரி ஆகியவற்றை பாதுகாப்பதற்கான தீர்மானம் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு இறக்குமதியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை, முதலீட்டை அடிப்படையாக கொண்ட, நுகர்வோர் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட ,அல்லது உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரமாக மாற்றும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது இந்த தீர்மானம் எனவும் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான பல காரணங்கள் குறித்து ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பது இதற்கான ஒரு காரணம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த அதிகரிப்பு தொடரும் என்பதை சந்தை போக்குகள் புலப்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள்களிற்காக பெருமளவு அந்நிய செலாவணியை செலவிடும் நாடாக இலங்கை காணப்படுகின்றது மேலும் பல சேவைகள் இந்த இறக்குமதியை அடிப்படையாக வைத்து இயங்குகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...