அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலை குறைப்பு-விசேட கலந்துரையாடல்!

Date:

பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை நாளை 10ஆம் திகதி முதல் குறைத்து அந்த விலைகளை ஒரு வருடத்துக்கு நிலையானதாக வைத்திருக்க உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை உப்பு உற்பத்தி நிலையத்தைப் பார்வையிட்ட பின் அமைச்சர் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அண்மைய நாட்களில் பெரும் உப்பு பற்றாக்குறையை நாட்டில் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதுடன் ஒரு கிலோ உப்பின் விலையை 100 ஆக அதிகரிக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது. நாட்டுக்குத் தேவையான அளவு உப்பு எம்மிடம் உள்ளது. அரசாங்கம் தவிர தனியார் துறையினராலும் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கை இப்போது உப்பை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாறியுள்ளது என்றார்.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...