அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இதுவரை 30 பேர் கைச்சாத்து

Date:

ஐக்கிய மக்கள் சக்தியினால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகபாராளுமன்றத்தில் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க எடுத்த தீர்மானத்திற்கு அமைய, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் குறித்த பதவியில் அவர் இருப்பதற்கு உரித்துடையவர் அல்ல என, 10 காரணங்களை முன்வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியினால், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கான கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

மேலும், சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ள குறித்த ஆவணத்தில் இதுவரை 30 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...