இந்த வருட மீலாத் விழா நுவரெலிய மாவட்டத்தின் ஹபுகஸ்தலாவயில்

Date:

இந்த ஆண்டுக்கான மீலாத் விழாவை நுவரெலிய மாவட்டத்தின் ஹபுகஸ்தலாவயில் மீலாத் விழா கொண்டாடுவதற்கான தீர்மானத்தை பிரதமர் மேற்கொண்டுள்ளார்.

நுவரெலிய மாவட்டத்திலுள்ள 28 பள்ளிவாயல்களின் புனர்நிர்மான வேலைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு மிக விரைவில் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஹட்டன் நகர ஜும்ஆப் பள்ளிவாயல் நினைவு முத்திரைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலிய மாவட்ட முஸ்லிம்களது வாழ்வு, வரலாறு, பாரம்பரியங்கள் பற்றிய நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

வழமையாக பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகள் இம்முறை தொழில்நுட்பத்தின் துணையுடன் online ல் நடைபெறவுள்ளன. கடந்த வருடம் போன்று இம்முறையும் வீடியோ ஆவணப்படப் போட்டியும் நடைபெறவுள்ளது. அத்துடன் கவியரங்கு மற்றும் வெபினார் நிகழ்வுகள், மர நடுகை, விலங்கினங்களுக்கு கருணை காட்டல், அனாதைகள் மற்றும் முதியோருக்கான நிகழ்வுகள் பள்ளிவாயல்களினூடாக நடைபெறவுள்ளன.

அதேபோன்று சிங்கள மொழியில் பத்து கஸீதாக்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன.

தேசிய மீலாத் தினத்தையொட்டி நுவரெலிய  மாவட்டத்தில் உள்ள பத்து முஅத்தீன்மார்கள்  மற்றும் 10 கதீப் மார்களை தெரிவுசெய்து பாராட்டி சன்மானம்  வழங்குவதற்கான  ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம்..

கொவிட் 19 நோய்ப்பரவலை கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி புர்தா பாடுதல் உட்பட நுவரெலிய மாவட்டத்தை மையமாக வைத்து பல்வேறு ஆண்மீக நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...