உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கைச்சாத்து

Date:

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கைச்சாத்திட்டனர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், எரிபொருள் விலையை அதிகரிக்க வலுசக்தி அமைச்சர், அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவில்லை என அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சர் உதய கம்மன்பில, அடிப்படை பொறுப்புக்களை மீறியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மிக அதிகளவில் குறைவடைந்திருந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம், இதுவரை எரிபொருளின் விலையை குறைக்காது, அதிகளவிலேயே வைத்திருந்ததுடன், அதனால் பெற்றுக்கொள்ளப்பட்ட இலாபத்தை பாராளுமன்றத்திற்கும், மக்களுக்கும் தெளிவூட்டவில்லை எனவும் நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை உள்ளிட்ட 10 விடயங்களை மேற்கோள்காட்டி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

Popular

More like this
Related

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...