எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அவசரகால நிவாரணம்

Date:

இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து கடற்சூழல் பெருமளவிற்கு மாசடைந்திருப்பதுடன் அதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீர்செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் 200,000 யூரோ நிதியை இலங்கைக்கு அவசரகால நிவாரணமாக வழங்கியுள்ளது.

இந்த உதவி கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பேரழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள 15,000 பேருக்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மீன்பிடி சமூகம் உள்ளடங்கலாக குறித்த அனர்த்தத்தினால் பாதிப்படைந்த தரப்பினருக்கு அவசியமான உதவிகளை வழங்கிவரும் செஞ்சிலுவைச்சங்கத்திற்கு இந்த நிதியுதவியானது வெகுவான பங்களிப்பை வழங்கும்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டமையால் தமது வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இது உதவியாக அமையும்.

அதேவேளை, கப்பலின் பாகங்கள் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் என்பன தொடர்ந்து கரையொதுங்கிவரும் நிலையில், அவற்றை சுத்தம்செய்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதையும் இந்த நிதியுதவி பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இதனூடாக கடற்பிராந்திய சுத்திகரிப்புப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களுக்கு அவசியமான பாதுகாப்பு அங்கிகளையும் உபரணங்களையும் பெற்றுக்கொடுக்க முடியும்.

கப்பல் அனர்த்தத்தினால் வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கான நிதியனுசரணைகளை வழங்குபோது பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடையோர் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பெருமளவான இரசாயனப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பதார்த்தங்களை ஏற்றிவந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் திகதி கொழும்புத்துறைமுகத்திற்கு அண்மையில் தீப்பரவலுக்குள்ளானது.

அதன் விளைவாக மிகமோசமான கடற்சூழல் அழிவு என்று கருதத்தக்க அனர்த்தத்தை தற்போது இலங்கை எதிர்கொண்டிருக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியைம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

சுமார் 12 நாட்கள் வரை தொடர்ந்த தீப்பரவலின் காரணமாக கப்பலில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டதுடன் அதிலிருந்த பிளாஸ்டிக் சிறுதுணிக்கைகள், இரசாயனப்பதார்த்தங்கள் என்பன கடற்சூழலில் கலந்ததையடுத்து பாரிய சூழல் மாசடைவு ஏற்பட்டுள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...