கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விசேட அறிவித்தல்

Date:

200 க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தொலைபேசிகள் மற்றும் ஊடகங்களில் குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் நோய் பரவாமல் தடுக்க சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பிக்க  குடும்ப சுகாதார பணியகம் முடிவு செய்துள்ளது.

இதனால்,

  • கர்ப்பிணித் தாய்மார்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்ப்பது,
  • அப்பகுதியில் உள்ள குடும்ப சுகாதாரப் பணியாளருடன் வழக்கமான தொடர்பைப் பேணுதல்,
  • சிக்கல்களைக் கொண்ட தாய்மார்கள் கிளினிக்குகளில் தவறாமல் கலந்துகொள்வது, முகமூடிகள் அணிவது,
  • இடைவெளி வைத்திருப்பது மற்றும் வழக்கமாக கைகளை சவர்காரம் பயன்படுத்த கலுவிக்கொல்லுதல் .

என்பவற்றில் கவனம் செலுத்துமாறு குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர்  வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கூறினார். இவற்றை செய்திகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கோவிட் தொற்றின் அச்சம் காரணமாக கணிசமான எண்ணிக்கையிலான கர்ப்பிணித் தாய்மார்கள் கிளினிக்குகளுக்கு வருவதில்லை, இது சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோவிட் நோய்க்கு அஞ்சாமல் முறையான சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தாய்மார்கள் தொடர்ந்து கிளினிக்குகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று குடும்ப சுகாதார பணியகம் கேட்டுக்கொள்கிறது.

கோவிட் தடுப்பூசி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்க சுகாதார அமைச்சினால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி வழங்க இன்னும் சிறிது காலம் ஆகும் என்று வைத்தியர் சித்ரமாலி கூறினார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...