கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் வீடுகளிலேயே உயிரிழக்க காரணம் இது தான்| உபுல் ரோஹண

Date:

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் பெரும் எண்ணிக்கையானோர் வீடுகளிலேயே உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளமைக்கான காரணம், அறிகுறிகள் குறைவடைந்த பின்னர் வைத்தியசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருப்பதாகும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளமைக்கான காரணம் , தொற்று அறிகுறிகள் குறைவடைந்த பின்னர் சுகாதார தரப்பினருக்கு அறிவிக்காமல் வீடுகளிலேயே இருப்பதாகும்.

இதேபோன்று தொற்று அறிகுறிகள் தீவிரமடைந்தால் அதன்போது தொற்றாளரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இன்மையும் வீடுகளில் உயிரிழப்புக்கள் பதிவாகும் வீதம் அதிகரிக்க காரணமாகும்.

கொவிட் -19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அவர்களிடம் சொந்த வாகனம் இல்லாதபட்சத்தில் வேறு வாகனங்களில் செல்வதிலும் சிக்கல் காணப்படுகிறது.

அத்தோடு 1990 அம்புலன்ஸ் சேவைகளும் தொடர் சேவையில் ஈடுபட்டுள்ளமையில் இதில் தாக்கம் செலுத்துகிறது. எனவே சாதாரண தொற்று அறிகுறிகள் தென்படும்போதே மக்கள் வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...