கொழும்பு பறவைகள் பூங்கா திட்டத்தின் பணிகள் ஆரம்பம்

Date:

மடிவெலயில் கொழும்பு பறவைகள் பூங்கா திட்டத்தை நகர அபிவிருத்தி அமைச்சர் நலகா கோடஹேவா நேற்று (28) ஆரம்பித்து வைத்தார்.

மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், இலங்கையின் சுற்றுலாத் துறையை புதுப்பிக்கவும் 39 ஏக்கர் பறவைகள் பூங்கா மடிவெலயில் உருவாக்கப்படும்.

மேலும், மடிவெல பகுதியில் உள்ள ஒரு ஈரநிலத்தை பறவைகள் பூங்காவாக மாற்ற பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்திற்கு ரூ. 1.51 பில்லியன் செலவிடவும், இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் எனவும் எதிபார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தின் அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.பிரதமரின் உத்தரவின் பேரில், கொழும்புக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இயற்கை தொடர்பான பல திட்டங்கள் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...