கோவிட் பரவல் ஆரம்பித்த பின்னர் மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவுசெய்துள்ளது- ஜனாதிபதி

Date:

நாட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் பொதுமக்களிற்கான நிவாரணங்களிற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவிட்டுள்ளது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிற்கான தனது உரையில் தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்படும் ஒவ்வொரு தடவையும் நாளாந்தம் வருமானம் உழைப்பவர்களிற்கான 5000 நிவாரணமாக 30 பில்லியனை செலவு செய்துள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பல தடவைகள் அரசாங்கம் இந்த செலவை சுமந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் கொரோனாவைரஸ் காரணமாக சுகாதார துறைக்காக மேலதிக நிதியை செலவிடவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் அன்டிஜென் சோதனைகளிற்காக மேலதிக நிதியை செலவிடவேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...