சிறைச்சாலை வாகனத்தில் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அரசியல் கைதிகள்!

Date:

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட 15 பேரும் பேருந்தில் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைதிகளில் 16 தமிழ் அரசியல் கைதிகளும் மற்றும், 77 சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...