சிறைச்சாலை வாகனத்தில் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அரசியல் கைதிகள்!

Date:

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட 15 பேரும் பேருந்தில் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைதிகளில் 16 தமிழ் அரசியல் கைதிகளும் மற்றும், 77 சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...