சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துங்கள்-சிரேஷ்ட பேராசிரியர் வேண்டுகோள்!

Date:

வேகமாக பரவும் கொவிட் வைரஸ் இனங்காணப்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன த சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று “BIG FOCUS” நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

14 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் நேற்று (01) முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தென் ஆபிரிக்காவில் மிக வேகமாக பரவக்கூடிய வைரஸ் வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தென் ஆபிரிக்காவில் இருந்து இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலமையில் இந்த செயற்பாடு மிகவும் ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...