சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துங்கள்-சிரேஷ்ட பேராசிரியர் வேண்டுகோள்!

Date:

வேகமாக பரவும் கொவிட் வைரஸ் இனங்காணப்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன த சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று “BIG FOCUS” நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

14 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் நேற்று (01) முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தென் ஆபிரிக்காவில் மிக வேகமாக பரவக்கூடிய வைரஸ் வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தென் ஆபிரிக்காவில் இருந்து இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலமையில் இந்த செயற்பாடு மிகவும் ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...